கடன் தொல்லை தீர "8 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்க"..அக்ஷய திருதியின் அற்புத மந்திரம்..!
கடன் தொல்லை தீர 8 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்க...அக்ஷய திருத்தியின் அற்புத மந்திரம்..!
அக்ஷய திருதியான இன்று மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
இன்றைய தினத்தில்,கடன் தீர்ந்து செல்வம் அதிக அளவில் வந்து சேர இந்த மந்திரத்தை 8 முறை மறக்காமல் சொல்லுங்கள்
கேரளா அருகில் காலடி என்ற ஊரில், பெரும்பாலான பெரியவர்கள் அதாவது ஆன்மீக பெரியவர்கள் பிச்சை எடுத்து தான் வாழ்ந்து வருவார்களாம்
ஆதி ஷங்கரர் ஒரு வீட்டிற்கு சென்று தனக்கு எதையாவது உண்ண கொடுங்கள் என கேட்கிறார்.
அந்த வீட்டில் உள்ள பெண்மணியோ, "ஐயா வீட்டில் எதுவும் இல்லை.. அனைத்து பாத்திரமும் கழுவி வைத்து உள்ளேன்....வீடு தேடி வந்த உங்களுக்கு எதையும் கொடுக்க முடியாத நிலையில் நான் உள்ளேன்.. கணவரும் பிச்சை எடுத்து உணவை கொண்டுவர தான் வெளியில் சென்று உள்ளார் அந்த பெண்மணி..
அதற்கு ஆதி சங்கரரோ... "இல்லை அம்மா நான் வந்துவிட்டேன்...உள்ளே சென்று பாருங்கள் எதையாவது கொடுங்கள் இல்லை என்று மட்டும் கூற வேண்டாம் என கூறி உள்ளார்.
பின்னர் மன சங்கடத்துடன் உள்ளே சென்று பார்க்கும் போது, எதுவுமே இல்லாததால், அருகில் இருந்த நெல்லிக்காய் ஜாடியில் இருந்த ஒரே ஒரு பீசையும் எடுத்து அவரது தட்டில் இடுகிறார் அந்த பெண்மணி.
ஆதி சங்கரரோ...பெண்மணியின் வறுமையை புரிந்துக்கொண்டு, ஒரு பாடல் பாடுகிறார். அந்த பாடல் பாடிய உடன் அந்த இடத்தில் தங்க நெல்லிக்கனி பொழிந்துள்ளது. எனவே இன்றைய தினத்தில் நெல்லிக்கனி தானமாய் தர வேண்டும்
அந்த பாடல் தான் "கனக ராரா சோஸ்திரம்" .....
இதில் செல்வத்தை ஈர்க்க கூடிய அழகான பொருள்படும் வரிகள் இடம் பெற்று உள்ளன.
இதனை சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கவிஞர் கண்ணதாசன்.
"கனக ராரா சோஸ்திரம்"
எனவே இந்த மந்திரத்தை அக்ஷய திருதியான இன்று எட்டு முறை சொல்லி வழிபட்டால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். குடும்பத்தில் உள்ள ஏழ்மை மற்றும் கடன் தொல்லை நீங்கி வாழ்வில் மென்மேலும் உயரலாம். சகல ஐஸ்வர்யமும் நம்மை வந்தடையும் என்பது ஐதீகம்.