சூரிய மண்டலத்தை சுற்றி உள்ள குறிக்கோள்களை அடைவதற்காக அமெரிக்காவின் நாசா அனுப்பிய  செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது.

பூமியை போலவே புதிய கோள் கண்டுபிடிப்பு..! உயிரினம் கூட உள்ளதா...?!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சூரிய மண்டலத்தை சுற்றி உள்ள குறிக்கோள்களை அடைவதற்காக அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி ஆய்வு செய்தது. இதுவரை இந்த செயற்கைக்கோள் 21 புதிய கோள்களை கண்டுபிடித்து உள்ளது.

இந்த நிலையில் மேலும் 3 புதிய கோள்களை கண்டுபிடித்து உள்ளது. அதில் ஒரு கோள் பூமியை போலவே உள்ளதாகவும் அதில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்தக் கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆய்வு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதியதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கோளுக்கு GJ 357d என்று பெயரிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.