மணமேடையில் மணமகணுக்கு நேர்ந்த அதோகதி.!! மணமகள் மணமேடையை விட்டு ஓட்டம்.!!
முன் கோபம் ஒரு மனிதனை முட்டாள் ஆக்கிவிடும்,இல்லை இல்லை அது வாழ்க்கையை அழித்துவிடும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
T.Balamurukan
முன் கோபம் ஒரு மனிதனை முட்டாள் ஆக்கிவிடும்,இல்லை இல்லை அது வாழ்க்கையை அழித்துவிடும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம், பரேலியை அடுத்த மீர்கஞ்ச் பகுதியில் ஒரு ராணுவ வீரருக்கு நடைபெற இருந்தது. திருமணத்துக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் தடல் புடலாக நடந்து முடிந்தது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகினார்கள் மணமகனும், மணமகளும் எதிர்கால கனவுகளோடு மணமேடை ஏறி அமர்ந்தார்கள். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்ட தயாராகிக் கொண்டிருந்தார்கள்.மணமகனின் தங்கை தன் அண்ணன் திருமணம் என்பதால் உற்சாகத்தோடு நடனம் ஆடிக்கொண்டிருந்தால், இதைப் பார்த்த மணமகன் அருகில் இருந்த சேரை எடுத்து தங்கச்சியை தாக்கிவிட்டார்.
மணமகளுக்கு கோபம் கொப்பளித்தது. தங்கைச்சியை இப்படி அடிக்கு இவர் என்னை அடிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம் இருக்கிறது. இப்படிபட்ட கோபக்கார மாப்பிள்ளையோடு நான் வாழ்க்கை நடத்த முடியாது என்று ,அழுத்தில் அணிந்திருந்த மாலையை தூக்கி எறிந்து விட்டு தன் வீட்டிற்குச் சென்று விட்டார். உறவினர்கள் ,மாப்பிளை குடிபோதையில் அப்படி நடந்து கொண்டார், மற்றபடி அவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் சொல்லியும் மணமகள் கேட்கவில்லை. எது எப்படியோ ஒருவனுக்கு, அவன் வாழ்க்கை துணை கிடைத்தும் கோபம் அதை இழக்கச் செய்திருக்கிறது.