திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 12 நாட்கள் களைகட்ட உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 12 நாட்கள் களைகட்ட உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை உள்ளன. இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலைப்பகுதியிலும், திருச்செந்தூர் கோயில் மட்டும் கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பானது. அதில், முருக பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை துவங்கி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது.
விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பஸ்நிலையம், திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தேர்கள் மற்றும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளையும் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ந்தேதி (நாளை) தொடங்கி 18-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

திருவிழாவிற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில் பகுதி, திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் நேரில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.எல்லா நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வரிசை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ஒரே நேரத்தில் 100 நபர்கள் அமரக்கூடிய வகையில் அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேரோட்டம், சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் நடைபெறும். எல்லா நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவிழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் முதலுதவி மையமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.பக்தர்கள் கடலில் நீராடும்போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். கோவிலுக்கு பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றார்.
