Sani: சனி அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம் ...சனியின் நேரடி அருள் பெறும் ராசிகள்... 12 ராசிகளின் பலன்கள்..
At the time Surya Grahan 2022 - Rasipalan: ஜோதிடத்தின் பார்வையில், சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை ஒரே நாளில் விழுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது, மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான என்னென்னெ பலன்களை இன்று தரப்போகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சனி பெயர்ச்சி :
30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் ஏப்ரல் 29-ம் தேதி அதாவது இன்று தனது ராசியை மாற்றப் போகிறார். அதன்படி, தற்போது சனி பகவான் அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் நுழைகிறார். கிரக இயக்கத்தின் பார்வையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை ஒரே நாளில்:
ஜோதிடத்தின் பார்வையில், சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை ஒரே நாளில் விழுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு இந்த தற்செயல் நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இந்த சேர்க்கையால் எந்த ராசிக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்:
மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று சனிபகவானின் மூன்றாம் பார்வை கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நிகழும்.
ரிஷபம்:
சனி பகவான் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் நுழைகிறார். இதனால், தொழில் வளர்ச்சியடையும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் பிறக்கும். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்:
சனி பகவான் உங்கள் ராசிக்கு இன்று ஏழாம் வீட்டில் நுழைகிறார். சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் நன்மைகளை பெறப் போகிறீர்கள். சொத்துக்களை வாங்குவீர்கள். வேலையில் சம்பள உயர்வு, கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
கடகம்:
சனி பகவான் உங்கள் ராசிக்கு இன்று எட்டாம் வீட்டில் ஆட்சி பெறுவார்.இது உங்களுக்கு ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். அதிர்ஷ்டங்களும் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்ட கூடிய யோகம் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் நுழைகிறார். உங்களுக்கு மிகப்பெரிய யோகம் வரப்போகிறது. வேலையில் வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் நடைபெறும். தொட்டது துலங்கும். வியாபாரிகள் நீங்கள் புதிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன் தொல்லை முழுமையாக நீங்கும். சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். உங்களுக்கு புதிய தொழில் துவங்க ஏற்ற காலமாகும்.
துலாம்:
துலாம் ராசியில் சனிபகவான் இன்று உச்சமடைய போவதால் உங்களுக்கு அதிஷ்டம் வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். இனி பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் கொடுக்கும். பணவரவு அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். நோய்கள் குணமாகும். உங்கள் ஆசைகளை சனி பகவான் நிறைவேற்றுவார். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் ஏழரை சனி முடிவுக்கு வரப்போகிறது. இனி நன்மைகள் தேடி வரும் காலம். திடீர் பண வரவு உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திடீர் பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களுக்கு இறைவழிபாடு மீது அதிக ஆர்வம் காணப்படும்.
மகரம்:
மகரம் ராசியினருக்கு, ஏழரை சனியில் ஜென்ம சனி உங்களுக்கு இன்று முதல் சனி விலகுகிறது. தொழிலில் அதிக வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். புது தைரியம் பிறகுக்கும். தொட்டது துலக்கும் எதிலும் வெற்றி நிச்சயம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சனியின் பார்வை உங்கள் மீது விழும். நீங்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை தைரியமாக முன்வைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பண ரீதியான தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சனியின் பார்வை உங்கள் மீது படும். 12ஆம் வீட்டு அதிபதி தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். நீங்கள் எடுத்து வைக்கும் காரியம் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்.