சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும் உகந்த ஆசனம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் என்பது உங்க இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும் நோயாகும். இரத்த குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். சர்க்கரை நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கூட கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சர்க்கரை நோயை நிர்வகிக்க நாம் சில வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். உங்க உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதன் மூலமும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் சர்க்கரை நோயை நாம் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி, கீழே கொடுக்கப்பட்ட ஆசனம் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும்.

இந்த ஆசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
தனுராசனம் :
விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுக்க வேண்டும். வலது காலை மட்டும் மடக்கி நெஞ்சுக்கு நேராக (இடதுபுறமாக) நீட்ட வேண்டும். அதன் பிறகு வலது காலை இடது கையால் பிடிக்க வேண்டும். அதே வேளையில் வலது கையை நேராக நீட்டி வைக்கவும். தலையை வலதுபுறமாக சாய்க்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்
இந்த ஆசனம் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆசனம் உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகப்பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும். முதலில் நீங்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இது இடி போன்ற நிலை ஆகும். இது முழங்காலிட்டு செய்யும் எளிய ஆசனம் ஆகும்.
மண்டுகாசனம் :
முதலில் நீங்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இது இடி போன்ற நிலை ஆகும். இது முழங்காலிட்டு செய்யும் எளிய ஆசனம் ஆகும். முதலில் உங்க கை விரல்களை மடக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது முஷ்டிப் பகுதியை அடிவயிற்று பகுதியில் வைக்க வேண்டும். தொப்புளுக்கு இரண்டு புறங்களிலும் வைக்க வேண்டும்.
இப்பொழுது மூச்சை வெளியே விடுங்கள் இப்பொழுது மெதுவாக முன்னோக்கி குனியுங்கள். முஷ்டியை தொப்புள் பகுதியில் அழுத்துங்கள்.உங்களால் முடிந்த வரை முதுகை நேராக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோக்கி பாருங்கள். மூச்சை வெளியே விட்டு வசதியான நிலையில் அமருங்கள். அப்புறம் இந்த நிலையில் இருந்து ரிலாக்ஸ் ஆகி உங்க கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து ரிலாக்ஸ் செய்யுங்கள்.
பச்சிமோத்தாசனம் :
தரை விரிப்பில் உங்க இருகால்களையும் முன்னோக்கி நீட்டிக் கொள்ளுங்கள். உங்க முழங்காலை மடக்காமல் இதைச் செய்ய வேண்டும். உங்க கைகளை மேல்நோக்கி நீட்டி உங்க முதுகெலும்பை நேராக வையுங்கள். மூச்சை வெளியே விட்டு உங்க வயிற்றை காலியாக வைத்திருங்கள். மூச்சை வெளியேற்றும் போது இடுப்பை முன்னோக்கி வளைத்து உங்க மேல் உடலை கீழ் உடலில் வையுங்கள்.
உங்க கைகளை குறைத்து உங்க பெருவிரல்களால் விரல்களை பிடித்துக் கொள்ளுங்கள். உங்க மூக்கால் முழங்காலை தொட முயற்சி செய்யுங்கள். 10 விநாடிகள் இதே நிலையில் இருக்கவும்.
தனுராசனம்:

தனுராசனம் வில் போன்ற நிலை ஆகும். தரையில் வயிற்றைக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். உங்க முழங்காலை வளைத்து கைகளால் அதை பிடித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஒரு வலுவான நிலையை கொடுக்கும்.
உங்க கால்கள் மற்றும் கைகளை எவ்வளவு தூரம் உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் உயர்த்துங்கள்.இதே நிலையில் சிறிது நேரம் இருங்கள். அதுமட்டுமின்றி, சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை சமாளிக்க , நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம். காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு உடம்பை நீரேற்றமாக வைத்திருங்கள்.