அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்...!!! சொந்த வீடு வாங்க வேண்டுமா....? 30 % குறையபோகிறது ...!!!!

வீடு வாங்க நினைபவர்கள் பொறுமையுடன் இருங்கள்......உங்களுக்கான பொற்காலம் தொடங்க உள்ளது.....

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததை தொடர்ந்து பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.

இதன் விளைவாக அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டுள்ளன... குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை மிகவும் தொய்வடைய தொடங்கி உள்ளது.....

அதாவது, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவின் முக்கியமான 42 நகரங்களில் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் வீடுகளின் விலை 30 % வரை சரியலாம் என்பது தெரிய வந்துள்ளது.

இதற்காக, நாடு முழுவதும் 42 நகரங்களில் 22,202 ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உருவாக்கிய 83,650 திட்டங்களை பிராப் ஈக்விட்டி ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவில், வரும் வாரங்களில் வீடு மறுவிற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, கொஞ்சம் பொறுமை காத்து அடுத்த ஆறு மாத காலத்திற்கு பிறகு வீடு வாங்கினால், முப்பது சதவீத அளவு குறைந்து வாங்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது......

உதாரணத்திற்கு :

தற்போது நாற்பது லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு , 27 இலட்சம் ரூபாயில் கிடைக்க வாய்ப்புள்ளது. எது எப்படியோ பொறுமையாகத்தான் இருந்து பார்க்கலாமே......!!

நல்லது நடந்தால் சரி.......!!!

குறிப்பு : வருங்காலத்தில் தரமான ரியல் எஸ்டேட்காரர்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட முடியும் என்ற நிலைமை மிக விரைவில் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.