தொழிநுட்பம் என்னதான் வளர்ச்சி கண்டாலும் இயற்கையோட மோத  முடியுமா என்ன..? இயற்கை நமக்கு தரும் வரப்பிரசாதம் ஏராளம். அதில் மருத்துவ குணம் கொண்ட இயற்கை பொருட்கள் நமக்கு கிடைத்த  அரிதான பொக்கிஷம்.

படுக்கை அறையில் கலர் மாறும் வெங்காயம்..! காலை எழுந்தவுடன் காத்திருக்கும் ஷாக்கிங்..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொழிநுட்பம் என்னதான் வளர்ச்சி கண்டாலும் இயற்கையோட மோத முடியுமா என்ன..? இயற்கை நமக்கு தரும் வரப்பிரசாதம் ஏராளம். அதில் மருத்துவ குணம் கொண்ட இயற்கை பொருட்கள் நமக்கு கிடைத்த அரிதான பொக்கிஷம்.

எத்தனை கொடிய நோய்கள் வந்தாலும் இயற்கை மருத்துவம் ஏராளம் உள்ளதை சிலரால்மட்டும் தான் புரிந்துகொண்டு அதனை பயன்படுத்துகின்றனர்.

நம் வீட்டில், நல்ல மனம் இருக்க வேண்டும் என்பதற்காக ரூம் ஸ்ப்ரே அடிக்கிறோம், குளியலறை மற்றும் கழிவறையில் நறுமனம் அதிகரிக்க பல ரசாயனங்களை பயன்படுத்துகிறோம்....ஆனால் இவை அனைத்தும் கெட்ட வாடை வராமல் தடுக்குமே தவிர,நோயை உண்டு செய்யும் அல்லது உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் அப்படியே இருக்கும்.

இதனை அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்....

தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை, நான்கு துண்டுகளாக வெட்டி இரவு நாம் அதிகம் பயன்படுத்தும் அறை குறிப்பாக படுக்கை அறையில் வைத்துவிட்டு மறுநாளை காலை பார்க்கும் போது, அது கருமை நிறமாக மாறி இருந்தால்,பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை ஈர்த்துக்கொள்வதை பார்க்க முடியும்...

இதனை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக நாளுக்கு நாள் மாற்றம் இருக்கும்.முதலில் சில நாட்கள் தொடர்ந்து இவரு செய்யும் போது படிப்படியாக கிருமிகள் குறையும். பின்னர் சில நாட்கள் காத்திருந்து மீண்டும் இதே போன்று செய்யலாம்.

அதே வேளையில் நம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதும் ஆக சிறந்தது.