தமிழில் பேசுவது அவமானம் இல்லை... நெத்தியடி கொடுத்த சிங்கப்பூர்!
தமிழ் மொழியாம் நம் தாய் மொழி என்றென்றும் சிறந்தது . உலக மக்கள் மத்தியில் தமிழ் மொழிக்கென ஒரு தனி சிறப்பு உண்டு.
ஆனால், நம் தமிழ் மக்களோ ஆங்கில வழி கல்வியின் மீது தான் அதிக ஈர்ப்பு வைத்துள்ளர்கள் என்று பார்த்தால், பேசுவதிலும் ஆங்கிலத்தை தான் விருப்புகிறார்கள். அதுவும் சிங்கப்பூரில், அதிகம் தமிழ் மக்கள் இருக்கும் இடத்தில் கூட தமிழ் பேச கூச்சப்படும் மக்கள் இருப்பதை கண்ட, அங்குள்ள நிறுவனம் ஒன்று, ஆங்கிலம் சரி வர தெரியவில்லை என்றாலும் தமிழில் பேசினால் அவமானமாக நினைக்கக் கூடாது என்பதற்காக , தமிழ் பேசுவது அவமானம் இல்லை என பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்துள்ளது .
அதை பார்த்தாவது நம் மக்கள் தமிழில் பேசமாட்டார்களா என்ற ஏக்கம் அங்குள்ள தமிழ்வாழ் மக்கள் மட்டுமின்றி , மற்றவர்களையும் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூற வேண்டும். இந்த வரிகள் தமிழனுக்கு சிங்கப்பூர் கொடுத்த நெத்தியடியாகத்தான் பார்க்க முடிகிறது.