மதுரை மீனாக்ஷி அம்மனையும், திருவண்ணாமலை கோவிலுக்கும் சென்று வருவதை நினைவூட்டும்  வகையில் வீடியோ பதிவில் மனம் நிகழ்ந்து மனமுருகி பேசி உள்ளார். 

கண்ணீர் விட்ட நித்தியானந்தா..! வாழ்க்கையில் பறிகொடுத்த 2 விஷயங்களை சொல்லி வீடியோ பதிவு..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்றைய இளைஞர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வரும் நபரான நித்தியானந்தா தற்போது எங்கு உள்ளார் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்காமல், அதேவேளையில் எப்போது அவர் நேரலையில் எப்போது நிகழ்ச்சிகளை வழங்குவார் என அவருடைய பேச்சை கேட்பதற்காக நாளுக்குநாள் மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.

இந்த ஒரு நிலையில் நித்தியானந்தா தேடப்பட்டு வரும் நபராக கருதினாலும், தான் கைலாச நாட்டிற்கு சொந்தக்காரர் என தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தவர். மேலும் இவருடைய எந்த ஒரு பேச்சாக இருந்தாலும் மக்களின் மனநிலைக்கு ஏற்ப காமெடியாகவும் அதே வேளையில் கருத்தாகவும் பேசி அனைவரையும் எளிதாக கவரக்கூடியவர். 

"

இப்படிப்பட்டவர் முன்பு மதுரை மீனாக்ஷி அம்மனையும், திருவண்ணாமலை கோவிலுக்கும் சென்று வருவதை நினைவூட்டும் வகையில் வீடியோ பதிவில் மனம் நிகழ்ந்து மனமுருகி பேசி உள்ளார். அதில் என்னிடம் இனி எதை பிடுங்க முடியும்? நான் மிகவும் விருப்பபட்டு சென்று வணங்கிய இடம் மதுரை மீனாட்சியையும், திருவண்ணாமலை சொக்கலிங்கமம் தான். இப்போ நானே அதை விட்டுவிட்டேன் வேறு என்ன இருக்கிறது.. என்னிடம் இருந்து பெற.. நானே அனைத்தையும் விட்டு விட்டேனே என மிகவும் மனவேதனையுடன் பேசியுள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக...