Asianet News TamilAsianet News Tamil

நிலை ரொம்ப மோசமா இருக்கு.. கொரோனா பாதிப்பு புதிய உச்சம்... இதற்கு ஒரே தீர்வு லாக்டவுன் தான்..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

new Covid-19 cases...India reports 93,249
Author
Delhi, First Published Apr 4, 2021, 12:46 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்ககளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது.

new Covid-19 cases...India reports 93,249

செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புதிய தொற்று  93,249 கடந்து உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 513 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 1,64,623ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,16,29,289 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 60,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

new Covid-19 cases...India reports 93,249

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 6,91,597 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 7,59,79,651 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 24 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios