'செக்' வைக்கும் மோடி....!!! தமிழகத்தில் இருபெரும் அதிகார மையத்தின் மேல் வைத்த “குறி “...!!!
'செக்' வைக்கும் மோடி....!!! தமிழகத்தில் இருபெரும் அதிகார மையத்தின் மேல் வைத்த “குறி “...!!!
தமிழகத்தில் தற்போது நிலவும் சூழல் , மக்களிடையே பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, தமிழகத்தில் நடந்து வரும் பல மாறுதல்கள் திடுக்கிட வைக்கிறது
சேகர் ரெட்டியின் ஊழல் வெளியாகி சிறையில் அடைக்கப்பட்டது
அடுத்ததாக, தமிழக தலைமை செயலாளராக இருந்த, ராம் மோகன் ராவ் , சட்டத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதால், அவரை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கபட்டது.
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் கைதானது.
குறிப்பாக : தலைமை செயலகத்திலேயே வருமானவரித்துறையினர் சோதனை செய்வது.
இந்நிலையில், அடுத்து சிக்கபோவது யார் என்ற எதிர்பார்ப்பு , அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக உள்ளது.
இந்நிலையில்,தற்போது முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்தின் மீதும் பல குற்றசாட்டு எழுகிறது. குறிப்பாக மணல் கொள்ளையில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனால், வருமானவரித்துறையினர், யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சோதனையிடுவர் என தெரிகிறது.
இந்த ரெய்டுகள் உண்மையில் யாரைக் குறி வைத்து? என்றுதான் இப்போது அரசியல் வட்டாரமும், பொதுமக்களும் யோசித்துக் கொண்டுள்ளனர்.
குறிப்பு :
உண்மையில் இது தமிழகத்தின் இரு பெரும் அதிகார மையத்தை குறி வைத்து நடத்தப்படுவதாகவே விவரம் தெரிந்தவர்கள் சொல்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது.