job oppurtunity in eb



உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான இன்டர்வியூ வெளிப்படையாக  நடைபெறும் என  தமிழ்நாடு  மின்சார வாரியம் தெரிவித்துள்ளது .

அதாவது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர்  பணியிடங்களுக்கான   நேர்முகத்தேர்வு  மார்ச்  13 ( இன்று ) முதல்  18 ஆம் தேதி  வரை ,வண்டலூரில்  உள்ள  ஒரு தனியார்  ஓட்டலில்  நடைபெறுகிறது .

6 நாட்கள்  நடைபெறும் இந்த நேர்முகத்தேர்விற்காக, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்  தலைமையில் குழுக்கள்  அமைக்கப்பட்டு  நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக , நேர்முகத்தேர்விற்கு செல்லும் முன்,  நம்மை தேர்வு செய்பவரை குழுக்கள் முறையில்  நாமே தேர்வு  செய்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .