husband will suffer due to thai month on amavasai
ஆண்களுக்கு ஆபத்து...! அமாவாசையில் பிறந்த தை...! "இதனை" செய்ய வேண்டுமாம்...!
ஐதீகம் பல உண்டு....முன்னோர்களின் பழக்க வழக்கங்களுக்கு மூட நம்பிக்கை என பலரும் தெரிவித்து வரும் இன்றைய கால கட்டத்தில்,அன்றே கணித்த ஜோதிடம் தான் என்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது..
அதனால் தான் இன்றளவும், திருமணம் என்றாலே நாள் நட்சத்திரம் பார்த்து இரு மனங்களை திருமணத்தில் இணைக்கிறார்கள்....
அந்த வரிசையில், ஆண்டு பிறப்பு கூட எந்த நாளில் பிறந்துள்ளது என்பதை பொருத்து, இந்த ஆண்டு எப்படி இருக்கும் சாதக பாதகங்கள் என்ன என்பதை எல்லாம் தெரிவிக்கின்றனர்....
தை
தமிழ் புத்தாண்டான தை மாதம் அமாவாசை அன்று பிறந்ததால்,ஆண்களுக்கு ஆபத்து என சில வதந்திகள் வந்தது. இதனை தொடர்ந்து மனைவிமார்கள் கோவிலுக்கு சென்று வருவதும்,வீட்டின் வாசலில் விளக்கேற்றி வைப்பதும் பல பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகிறது
அதன்படி,
ஆண்களுக்கு ஆபத்து என நெல்லை மாவட்டத்தில் வதந்தி பரவியதால் அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் கணவர் ஆயுள் பெற வேண்டி மனைவிகள் தாலி கயிறு கட்டி வேண்டினர்.
ஆண்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க வீட்டு வாசல் முன் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது போல பல வதந்திகள் தொடர்ந்து வந்தன..
ஜோதிடர்கள் சொன்னது என்ன ?
தமிழ் புத்தாண்டான தை மாதம் அமாவாசை அன்று பிறந்ததால்,ஆண்களுக்கு ஆபத்து என ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் காட்டு தீ போல பரவியதால்,நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள திருமணமான பெண்கள் அந்தந்த ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் தாலி கட்டி வேண்டுய் உள்ளனர்.

ஆக மொத்தத்தில் இந்த நிகழ்வு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும்,விளக்கேற்றிய பெண்கள் பெரு மூச்சி விட்டுள்ளனர்.இதுவரை விளக்கேற்றாமலும், மரத்தில் தாலி கட்டி வழிப்படாதவர்களும் ஏதோ ஒரு குழப்பத்தில் உள்ளனர்.
நம்பிக்கை உள்ளவர்கள் இதனை செய்கிறார்கள்...இதில் நம்பிக்கை இல்லாதவர்கள்சிரிக்கிறார்கள்.....
