Asianet News TamilAsianet News Tamil

முதல் 6 ராசிக்காரர்களே..! வரும் 2019 - இல் நீங்கள் செய்ய வேண்டிய "முக்கிய பரிகாரம்" இதுதான்..! குறிச்சி வச்சிக்கோங்க... மறந்துடாதீங்க..!

புத்தாண்டு பிறக்க உள்ளது.. வரும் புத்தாண்டில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதை எல்லாம் அடைய வேண்டும், நம்மை எப்படி எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என பலரும் பல்வேறு விதங்களில் சிந்தித்து வருவீர்கள், இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வரும் ஆண்டாவது இந்த ஆண்டை விட நம் வாழ்க்கையில் வேறு ஏதாவது ஒரு அதிசயம் விடாதா என ஏக்கமாக நினைத்துப்பார்ப்பதும் உண்டு. 

horoscope benefits for new year 2019
Author
CHENNAI, First Published Dec 29, 2018, 5:01 PM IST

முதல் 6 ராசிக்காரர்களே..! வரும் ஆண்டில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரம் இதுதான்..! 

புத்தாண்டு பிறக்க உள்ளது.. வரும் புத்தாண்டில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதை எல்லாம் அடைய வேண்டும், நம்மை எப்படி எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என பலரும் பல்வேறு விதங்களில் சிந்தித்து வருவீர்கள், இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வரும் ஆண்டாவது இந்த ஆண்டை விட நம் வாழ்க்கையில் வேறு ஏதாவது ஒரு அதிசயம் விடாதா என ஏக்கமாக நினைத்துப்பார்ப்பதும் உண்டு. அந்த எதிர்பார்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும். சரி அதை எப்படி நாம் தெரிந்துகொள்ள முடியும்? அட்லீஸ்ட் ராசி பலனை வைத்து தெரிந்து கொள்ளலாம் அல்லவா..?

அதுக்கு முன்னாடி வரும் புத்தாண்டில் எந்தெந்த ராசியினர், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை முதலில் பார்த்துவிடலாம். அடுத்து வரும் பதிவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள மாற்றங்கள் பற்றியும், வந்து சேரும் அதிர்ஷ்டம் பற்றியும் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றம் பற்றியும் அயல்நாட்டு வேலை வரை அனைத்தையும் பார்க்கலாம். அதற்கு முன்னதாக பரிகாரங்கள்.

மேஷம் ராசி நேயர்களே! 

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தொடர்ந்து 19  வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று குங்குமம் மஞ்சள் அபிஷேகம் செய்து, மலர்மாலை அணிவித்து வாருங்கள். இதுநாள் வரை உங்களை பெரும் தொல்லை கொடுத்து வந்த கடன் பிரச்சினையும் தீரும். மனதில் நிம்மதியும் பிறக்கும் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே! 

வீரபத்திரன் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து அதை அருந்தி வாருங்கள். அஷ்டம சனியின் இடையூறு குறைந்து உங்களை இதுவரை படுத்தி வந்த பெரும்பாடு அனைத்தும் படிப்படியாக குறைந்து வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெறுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே!

நீங்க செய்ய வேண்டியது தொடர்ந்து 14 புதன் அல்லது சனிக்கிழமைகளில், யோக நரசிம்மர் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து ஆலயத்தை ஒன்பது முறை சுற்றி வந்து வணங்கி வரவேண்டும். குடும்ப பிரச்சனைகள் முதல் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். ஆக வரும் ஆண்டு மிக சிறப்பாக அமைய போகிறது உங்களுக்கு.

கடக ராசி நேயர்களே!

ஈசனுக்கு எதிரே இருக்கும் நந்திக்கு இளநீர், பால், அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி மனமுருக 21 நாட்கள் வேண்டி வாருங்கள் நீங்கள் இதுவரை பட்ட அனைத்து துன்பங்களும் நீங்கி அத்தனையும் உங்களுக்கு இன்பமாக மாறும்.

சிம்ம ராசி நேயர்களே!

நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தொடர்ந்து 12 செவ்வாய்க்கிழமைகளில் மூன்று முறை கந்தசஷ்டி கவசம் பாடி விட்டு முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து, அந்த பாலை அருந்தி வாருங்கள். தேங்காய் உடைத்து பூஜை செய்து வாருங்கள். திருமண சுபகாரியம் விரைவில் உங்களுக்கு கைக்கூடும். அனுகூலம் கிடைக்கும் இதுவரை இழுபறியாக இருந்த அனைத்தும் இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு வெற்றி ஆண்டாக அமையும்.

கன்னி ராசி நேயர்களே!

நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தொடர்ந்து 19 செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு பூமாலை அணிவித்து வேலுக்கு அபிஷேகம் செய்து வர சகல சிக்கல்களில் இருந்து மீண்டு, அடுத்த ஆண்டு முழுக்க வெற்றி ஆண்டாக கொண்டாட போறீங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios