அடடா ... தமிழகத்தில் மீண்டும் பயங்கர மழை வரப்போகுதாம்...! வானிலை ஆய்வு மையம் சொல்லிட்டாங்க...!
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கன்னியாகுமரி தூத்துக்குடி மதுரை நெல்லை தேனி நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு மத்திய அந்தமான் கடல் பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.