உங்க லவ்வுக்கு “பச்சை கொடி” .........ரெடி !!!
பெற்றோர்கள் காதலை எதிர்பவர்கள் அல்ல. அவர்களிடம் நம் காதலை எப்படி வெளிபடுத்த வேண்டும் என்பதில் இருக்கு...... நம்முடைய காதலின் வெற்றி.......!
இதுபோன்ற சமயத்தில், எப்படி நம் பெற்றோரிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்பதை சிம்பிளா சொல்றேன் கேட்டுகோங்க.........
காதலுக்கு கிரீன் சிக்னல் ::
உங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்
பெற்றோர்கள் தங்களின் காதலை கேட்டு கோபம் அடைந்தாலும், நீங்கள் பொறுமையாக இருந்து அவர்கள் சொல்வதை நன்றாக காது கொடுத்து கேட்க வேண்டும். இதனால் பெற்றோர்கள் உங்கள் காதலை பற்றி அவர்களின் மனதில் உள்ள எண்ணத்தை நன்கு புரிந்து கொண்டு, பின் அதற்கு ஏற்றவாறு உங்களால் பேச முடியும்.
காதலை வெளிப்படுத்தும் போது, அதிக கோபம் அடையாமல் பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்து பேச வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.
மிக மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், உங்கள் சம்மதம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன், நீங்கள் என்னுடைய காதலுக்கு சம்மதம் சொல்லும் வரை நான் காத்திருப்பேன் என்று மிகவும் பணிவுடன் பெற்றோர்களிடம் சொல்லி பாருங்களேன்........
.
இன்னொரு விசியம் , நாம் பெற்றோர்களிடம் காதலை சொல்லியதும் உடனே அவர்களிடம் சம்மதத்தை எதிர்பார்த்து அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. புரிகிறதா......
உங்கள் காதலர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் உங்களின் பெற்றோர்களும் முக்கியம் என்று நீங்கள் நினைப்பதை உங்களின் பெற்றோர்களுக்கு நன்றாக உணர்த்த வேண்டும் என்பது அதிமுக்கியமான தருணம் ........
ஆக மொத்ததுல , பெற்றோரின் அனுமதியை பெற சில ஆண்டுகள் காத்திருந்துருந்து, அவர்கள் அனுமதியுடன் திருமணம் நடந்தால் தான் ......அது உண்மையான ...மிகவும் மகிழ்வான திருமணமாக அமையும்........!!!
