கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசு முயற்சி செய்து வருகிறது

தமிழக அரசு வேலை ரெடி..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன் படி,

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 83

பணி: நகல் படிப்பவர், நகல் பரிசோதகர், 11 போஸ்ட், மாதம் ரூ.19,500 - 62,000 சம்பளம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்ததாலே போதும் 

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 16 போஸ்ட், மாதம் ரூ.19,500 - 62,000 சம்பளம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்ததாலே போதும்

பதவி: அலுவலக உதவியாளர், 21 போஸ்ட், மாதம் ரூ.15,700 - 50,000 சம்பளம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, வாகனத்தை இயக்கம் அனுபவம் கண்டிப்பாக தேவை. 

பணி: காவலர், இரவுக்காவலர், 16 போஸ்ட், மாதம் ரூ.15,700 - 50,000 சம்பளம், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் அவசியம். 

பணி: துப்புரவுப் பணியாளர், 4 போஸ்ட், மாதம் ரூ.15,700 - 50,000 சம்பளம், தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானது. 

பணி: பெருக்குபவர், 5 போஸ்ட், ரூ.15,700 - 50,000 சம்பளம், தமிழ் எழுத படிக்க தெரிந்திருத்தல் அவசியம். 

மேற்குறிப்பிட்ட அனைத்து பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயமுத்தூர் 641018

இது குறித்த முழு விவரம் அறிந்துகொள்ள, https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20NO%2001%20of%202019_1.pdf என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும். கடைசி தேதி: 28.06.2019. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். வாழ்த்துக்கள்.