Asianet News TamilAsianet News Tamil

மாலை நேரத்தில் மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை..!

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.

gold rate hike as on 20th nov 2019
Author
Chennai, First Published Nov 20, 2019, 6:27 PM IST

மாலை நேரத்தில் மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தாலும் சவரன் விலை 29 ஆயிரத்தை தாண்டி தான் விற்பனையாகிறது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.  

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

gold rate hike as on 20th nov 2019

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3654 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 232 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 3664.00 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து  312 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில், சவரனுக்கு ரூ. 120  உயர்ந்து உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா அதிகரித்து வெள்ளி 48.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios