தங்கம் விலை அதிரடி உயர்வு...! சவரனுக்கு ரூ.232 அதிகம்..!
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
தங்கம் விலை அதிரடி உயர்வு...! சவரனுக்கு ரூ.232 அதிகம்..!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தாலும், இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.29 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து 3658 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
வெள்ளி விலை நிலவரம்
கிராமுக்கு 60 பைசா அதிகரித்து வெள்ளி 48.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.