'குழந்தை குட்டி பெத்துக்ட்டு கல்யாணம் தான் பண்ணிக்கலாமா'!? என்கிற சினிமா பாடல் நிஜமாகியிருக்கிறது. 30ஆண்டுகள் கழித்து தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

T.Balamurukan
 'குழந்தை குட்டி பெத்துக்ட்டு கல்யாணம் தான் பண்ணிக்கலாமா'!? என்கிற சினிமா பாடல் நிஜமாகியிருக்கிறது. 30ஆண்டுகள் கழித்து தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கிறார். மகன் ஜித்தீசும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்.. இவர்களுக்கு ஒரு கை குழந்தையும் இருக்கிறது.இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் இருப்பதால் தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது.அதன்படி தந்தை, மகன் இருவருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைத்திருக்கிறது அந்த தொண்டு நிறுவனம்.
30 ஆண்டு காலம் திருமணம் ஆகாமல் தன் பேரக்குழந்தையின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் ராம்லால் தாத்தா.இது ஒரு விசித்திரமான திருமணம்.