விசாவில் அதிரடி மாற்றம் ....!!! ஐடி துறையினருக்கு பெரும் ஆப்பு ....!!!

இங்கிலாந்து செல்ல விசா பெற வேண்டும் என்றால், நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு விசாவுக்கு விண்ணப்பிக்கும், நிறுவன ஊழியர்களின் சம்பள விகிதம் 30 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் தற்போது 20,800 பவுண்டுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது {அதாவது டயர் 2 நிறுவனங்களிடையே பணி மாற்ற விசா – ஐசிடி}

பொதுவாக ஐசிடி முறையிலான விசாவை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறது. அதாவது 90 சதவீத விசாக்கள் ஐடி துறையினர் பயன்படுத்துவதாக தெரிகிறது.

விசாவின் கொள்கைகள் :

நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே புதிய விசா கொள்கை (ஐசிடி) பொருந்தும்.

இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்து மேலும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில் குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக புதிய ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது ( IELTS)

இந்த டயர் 2 பொது பிரிவில் அனுபவம் மிக்க பணியாளர்களின் ஊதிய விகிதம் 25 ஆயிரம் பவுண்டு களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டதாரி பயிற்சியாளர்கள் ஊதிய விகிதம் 23 ஆயிரம் பவுண்டுகளாகும்.

இதன்படி, ஒரு நிறுவனம் ஓராண்டுக்கு 20 பணியாளர்கள் வரை நிரப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

டயர் 2 நிறுவனங்களிடையே பணி மாற்ற விசா – ஐசிடி ....(புதிய மாற்றம் வந்துள்ளது )

இங்கிலாந்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக எம்ஏசி கடந்த ஆண்டு சில பரிந்துரைகளை அளித்தது. இதன் தொடர்ச்சியாக, இங்குலாந்து விசா பெறுவதில்,இத்தனை மாற்றம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.....