Asianet News TamilAsianet News Tamil

ஸ்தம்பித்தது  பெங்களுரு....!!! 4 நாட்கள் விடுமுறை – மக்கள் பெரும் அவதி ...!!   

bengalore 4-days-leave-public-problem
Author
First Published Oct 29, 2016, 2:40 AM IST


ஸ்தம்பித்தது  பெங்களுரு....!!! 4 நாட்கள் விடுமுறை – மக்கள் பெரும் அவதி ...!!   

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரு மாநகரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. தொடர்  விடுமுறை   காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பெங்களூருவிலிருந்து , அவர்களது  சொந்த  ஊருக்கு திரும்ப  தொடங்கியுள்ளனர்.

தற்போது , தீபாவளி மற்றும் கர்நாடகாவின் பாலிபாடமி மற்றும் ராஜ்யோற்சவ தினம் ஆகியவற்றுக்காக அரசு, தொடர்ந்து நான்கு  நாட்கள்  விடுமுறை  அளித்துள்ளது.

அதாவது, நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளதால்,வெளியூரிலிருந்து பெங்களூரில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர்.இதன் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலினால் பெங்களூரு  பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெங்களூரு மாநகர எல்லையை தாண்டுவதற்கே சுமார் 3 மணி நேரம்  ஆகிறதாம்.........

தீபாவளி  கொண்டாட்டம்........கூட்ட நெரிசலில்  சிக்கி , கொஞ்சம் திணறும் கொண்டாட்டமாக  மாறியுள்ளதாக  தெரிகிறது ....

Follow Us:
Download App:
  • android
  • ios