Asianet News TamilAsianet News Tamil

ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..! 10 குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண்..! உலகில் 2 ஆவது முறையாக ...

ஈராக்கை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தை  பிராந்துள்ள அதிசயம் நடந்துள்ளது.

a lady gave birth to 7 babies in iraq
Author
Chennai, First Published Feb 18, 2019, 7:26 PM IST

ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..! 

ஈராக்கை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தை பிராந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. இதற்கு முன்னதாக 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக  உலகிலேயே 2 ஆவது முறையாக தற்போது ஈராக்கில் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. 

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 25 வயதுடைய ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தை பிறந்துள்ளது. 6 ஆண் குழந்தைகளும்,1 பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 7 குழந்தைகளும் நலமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios