தோழியை கர்ப்பமாக்கியதாக தாயிடம் கூறிய 16 வயது மகன்- செருப்படி வாங்கிய சம்பவம்..!
தன்னுடன் பழகி தோழியுடன் தவறு செய்து விட்டதாகவும்,அதனால் தோழி தற்போது கர்ப்பமாக உள்ளதாக,தன் தாயிடம் 16 வயது மகன் பொய் சொல்லி விளையாடி உள்ளான். இது போன்ற தவறுக்கு தன் அம்மா எப்படி ரியாக்ட் செய்வார் என தெரிந்துகொள்ள,தாய்க்கு தெரியாமல் ஒரு கேமரா வைத்து எடுத்துள்ளான்.
அப்போது தன் தோழியிடம் பேச சொல்லி தன் தாயிடம் போனை கொடுக்கிறான்...
அதில் பேசிய பெண்,சொல்லி வைத்த மாதிரி பேசவே, அது உண்மை என நம்பிய தாய்,மகனை செருப்பால் அடித்து துவைத்து எடுத்து விடுகிறார்...அது பொய் என்று அடி வாங்கியவாறே அந்த மகன் சொல்லவே...அடிப்பதை நிறுத்தி விடுகிறார் தாய்...
இன்றைய தலைமுறையினருக்கு இதெல்லாம் ஒரு சாதாரணமா விஷயமாக உள்ளது என்பதை நிரூபணம் செய்யும் விதமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.