டூபீஸ் உடை அணிந்து கொண்டு கொரொனா வார்டில் தைரியமாக பணிபுரிந்த நர்ச்சுக்கு மாடலாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டூபீஸ் உடை அணிந்து கொண்டு கொரொனா வார்டில் தைரியமாக பணிபுரிந்த நர்ச்சுக்கு மாடலாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் அதிக உயிர் பலி வாங்கி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடமும், ரஷ்யா 2வது இடமும் பிடித்துள்ளன.

மொத்த பாதிப்பு 3 லட்சத்தை கடந்ததுள்ளது.இதுவரை அங்கு 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. புதிதாக 135 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,972 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து 85,392 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 193 கி.மீ,, தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வார்டு உள்ளது. இங்கு ஒரு இளம் நர்ஸ் பணிபுரிந்து வருகிறார். இப்போது ரஷ்யாவில் கோடை காலம் என்பதால் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து அதற்கு மேல் கொரொனா வார்டில் பணிபுரிவதற்குரிய பி.பி.இ என்று அழைக்கப்படும் முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார். இந்த உடையை பார்க்கும் போது கொரோனா நோயாளிகளுக்கு இனம் புரியாத எதிர்ப்பு சக்தி உடலில் பாய்ச்சப்பட்டது போல் இருக்கிறதாம்.