Asianet News TamilAsianet News Tamil

பவுலர் மேல பழியை தூக்கி போடாம நீயே பொறுப்பேத்துக்க தம்பி.. கோலியை தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்

ஆர்சிபி அணியின் தொடர் தோல்விகளுக்கு பவுலர் மீது பழியை போடாமல், கேப்டன் கோலி தானே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் ஒருவர் கடுமையாக சாடியுள்ளார். 

gambhir emphasis rcb captain virat kohli to take blame himself
Author
India, First Published Apr 8, 2019, 1:16 PM IST

கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம் ஆகியவற்றில் ஒரு கேப்டனாக கோலி சொதப்பிவந்தார். அண்மைக்காலமாக அவர் கேப்டன்சியில் மேம்பட்டிருப்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால் தான் இன்னும் மேம்படாததை ஆஸ்திரேலிய தொடரில் அவரே மீண்டும் வெளிப்படுத்தினார். 

கள வியூகம் மற்றும் பவுலிங் சுழற்சியில் ஜீரோவாகத்தான் இருக்கிறார். அதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவரே உலகிற்கு காட்டினார். சர்வதேச அளவில் தலைசிறந்த வீரராக திகழும் கோலி, கேப்டன்சியில் படுமோசமாக சொதப்புகிறார். 

கோலி ஒரு சிறந்த கேப்டன் இல்லை என்பதை ஐபிஎல்லில் அவரது செயல்பாடுகளும் வெற்றி விகிதமுமே நமக்கு உணர்த்தும். டிவில்லியர்ஸ் என்ற தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருந்தும் கோலியால் ஒருமுறை கூட கோப்பையை ஆர்சிபி அணிக்கு வென்று கொடுக்க முடியவில்லை. 

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே ஆர்சிபி அணிக்குத்தான் ஆடிவருகிறார் கோலி. 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 2016ம் ஆண்டில் மட்டுமே அந்த அணி இறுதி போட்டி வரை சென்றது. கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 

gambhir emphasis rcb captain virat kohli to take blame himself

ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் உள்ளது. அந்த அணி கோப்பையை வெல்லாததற்கு கோலியின் மோசமான கேப்டன்சியும் ஒரு காரணம். கோலி நல்ல பேட்ஸ்மேன் தான். ஆர்சிபி அணிக்காக நன்றாக ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார்.  ஒரு பேட்ஸ்மேனாக கோலி சிறந்த விளங்கினாலும் கேப்டன்சியில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. 

நடப்பு சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோற்றுள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்திருந்தார் கவுதம் காம்பீர். 

கோலி ஒரு கேப்டனாக இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. கோலி உத்தி ரீதியாக மிகவும் மோசமாக செயல்படுகிறார். அதனால் தான் அவரால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்கள்லாம் இருக்கிறார்கள். தோனியும் ரோஹித்தும் அவர்களின் அணிகளுக்கு மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்கள். தோனி மற்றும் ரோஹித்துடன் கோலியை ஒப்பிட முடியாது. 7 ஆண்டுகளாக கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அவரது கேப்டன்சி மோசமாக இருந்தும் கூட அவரை இன்னும் கேப்டன்சியிலிருந்து தூக்காததற்காக அந்த அணி நிர்வாகத்திற்கு கோலி நன்றி சொல்ல வேண்டும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

gambhir emphasis rcb captain virat kohli to take blame himself

காம்பீரின் விமர்சனத்தை பொய் என நிரூபிக்கும் வகையில் நடப்பு சீசனில் கோலியின் செயல்பாடுகள் இல்லை. காம்பீரின் விமர்சனத்தை ஊர்ஜீதப்படுத்தும் வகையில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார் விராட் கோலி. இதுவரை இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி. இந்த சீசனில் இனிமேல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பது ஆர்சிபி அணிக்கு சாத்தியமே இல்லை. 

இந்நிலையில், ஆர்சிபியின் தொடர் தோல்விகளை அடுத்து மீண்டும் கோலியை விமர்சித்துள்ளார் காம்பீர். விராட் கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவர் ஒரு அப்ரெண்டீஸ். அவர் இன்னும் கேப்டன்சியில் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. தொடர் தோல்விகளுக்கு பவுலர்களின் மீது பழியை போடாமல் அதற்கு கேப்டன் கோலியே பொறுப்பேற்க வேண்டும் என்று காம்பீர் கடுமையாக சாடியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios