Asianet News TamilAsianet News Tamil

பெண்களின் ஆரோக்கியத்திற்கு யோகி அரசின் மிஷன் சக்தி யோஜனா: நவ. 3 இல் தொடக்கம்

முன்மாதிரியான 1090 ஹெல்ப்லைன் திட்டம் சமூக இழிவு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதில் தடைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Yogi Govt to start Mission Shakti Yojana on Nov 3, focusing on Women Health sgb
Author
First Published Oct 1, 2024, 12:54 PM IST | Last Updated Oct 1, 2024, 12:54 PM IST

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, ஷரதியா நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 3ஆம் தேதி "மிஷன் சக்தி" திட்டத்தின் ஐந்தாவது கட்டத்தை தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கான பிரத்யேக ஹெல்ப்லைன் - 'மஹிளா ஆரோக்கிய சகாயவாணி' அறிமுகப்படுத்தப்படும்.

குறிப்பாக கிராமப்புறங்களில் விரைவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று உ.பி. அரசு கூறியுள்ளது. முன்மாதிரியான 1090 ஹெல்ப்லைன் திட்டம் சமூக இழிவு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதில் தடைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஹெல்ப்லைனின் சிறப்பு அம்சம், தொலைதூர மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி, மகளிர் மருத்துவ நிபுணர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை வழங்குவதும், பெண்களுக்கு நிபுணத்துவ மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதும் ஆகும்.

சிறப்பு மருத்துவ பராமரிப்பு குறைவாக இருக்கும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு இது மிகவும் முக்கியமானது. உத்தரபிரதேசத்தின் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளில் உள்ள இடைவெளியைக் குறைப்பதன் மூலம், சரியான நேரத்தில் மற்றும் ரகசியமான முறையில் மருத்துவ உதவியைப் பெறுவதற்கு இந்த ஹெல்ப்லைன் உதவியாக இருக்கும்.

மிஷன் சக்தி திட்டம் முதலில் 17 அக்டோபர் 2020 அன்று தொடங்கப்பட்டது. இது யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் முதன்மையான திட்டங்களில் ஒன்றாகும். இது பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பல ஆண்டுகளாக, பெண்களின் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முன்முயற்சிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் விரிவடைந்துள்ளது.

வரவிருக்கும் ஐந்தாவது கட்டம் அனைத்து தரப்பு பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.

புதிய ஹெல்ப்லைன் உடனடி மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய்வழி ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க பெண்களுக்கு உதவும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு (WCSO) கூறுகிறது. தரமான மருத்துவ சேவை பெரும் சவாலாக இருக்கும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே ஹெல்ப்லைன் நோக்கம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசு, மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் கண்ணியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பெண்களின் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. மிஷன் சக்தி திட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் 2020 இல் தொடங்கப்பட்டதில் இருந்து மேம்பாட்டு வந்துள்ளன.

இரண்டாவது கட்டம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் 2021ஆம் வருடம் ஆகஸ்ட் 21 தேதியும், நான்காவது கட்டம் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியும் தொடங்கப்பட்டன. இப்போது தொடங்கும் ஐந்தாவது கட்டம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் யோகி அரசின் இடைவிடாத முயற்சியைக் காட்டுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios