woman mla and woman police fight

இமாச்சலப் பிரதேசத்தில் தன்னை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவை உடனடியாக பெண் போலீஸ் திரும்பி அடித்தார்.

இமாச்சல பிரதேசத்திற்கு அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. ஜெய்ராம் தாக்கூர் முதலமைச்சராக பதவியேற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றது.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த இமாச்சலப் பிரதேசத்தை பாஜக கைப்பற்றியது. இந்நிலையில், இமாச்சல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.

ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரி தன்னை கூட்டம் நடக்கும் கூடத்துக்குள் அனுமதிக்குமாறு கோரினார். 

இதுதொடர்பாக அங்கிருந்த பெண் காவலர் ஒருவருக்கும் ஆஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த எம்.எல்.ஏ ஆஷாகுமாரி, அந்த பெண் காவலரை கன்னத்தில் அறைந்தார். இதனையடுத்து சற்றும் யோசிக்காத அந்த பெண் காவலரும் பதிலுக்கு எம்.எல்.ஏ கன்னத்தில் அறைந்தார். போலீசின் பதிலடியை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ ஆஷாகுமாரி அதிர்ந்து போனார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> Shimla: Congress MLA Asha Kumari assaults woman constable, gets slapped back. She was being allegedly denied entry by Police in Rahul Gandhi&#39;s review meeting (amateur video) <a href="https://t.co/puvMRnHKss">pic.twitter.com/puvMRnHKss</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/946647996619374592?ref_src=twsrc%5Etfw">December 29, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.