Asianet News TamilAsianet News Tamil

ஜி20இல் இந்தியா சாதித்தது என்ன? வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி!

ஜி20 தலைமையேற்று இந்தியா சாதித்தது என்ன என்பது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்

What did India achieve through the G20 summit asianet news exclusive Interview with Foreign Minister Jaishankar smp
Author
First Published Sep 18, 2023, 12:18 PM IST

ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று, உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைத்ததன் மூலம் உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. இந்த நிலையில், ஜி20 மாநாடு, இந்தியாவின் முயற்சிகள், ராஜதந்திரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏசியாநெட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

ஜி20 மாநாட்டின் மூலம் இந்தியா தனது திறனை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, ஒரு விஷயத்தை மேற்கத்திய நாடுகள் நிர்ணயம் செய்யும் பாரம்பரியத்தையும் இந்தியா முறியடித்துள்ளது. உலக அளவில் அஜெண்டாவை அமைத்து இந்தியா புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாட்டின் மூலம் நமது ராஜதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினோம் என தெரிவித்த அவர், “இது பல்வேறு நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். ராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கைகள் என்பது கூட்டத்திலோ, அறையிலோ நடக்கும் விவாதங்களுடன் முடிவடைவதில்லை. அதை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளோம்.” என்றார்.

“நாடு முழுவதும் 60 நகரங்களில் 200 க்கும் மேற்பட்ட கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தினோம். வெவ்வேறு நகரங்களில் ஜி20 கூட்டங்களை ஏற்பாடு செய்ததன் மூலம், இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்தின் கலாச்சார செழுமையையும் உலகுக்குக் காட்டினோம். ஒவ்வொரு பிராந்தியத்தின் கலாசார மகிமையையும் உலகத் தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். உலகளாவிய பிரச்சினைகள் முதல் பொதுவான பிரச்சினைகள் வரை விவாதித்துள்ளோம்.” என்று ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்தார்.

ஜி20 மாநாட்டில் திரளான மக்கள் பங்கேற்றதன் மூலம் நமது மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதினர். வெளியுறவுத் துறை அமைச்சராக, வெளியுறவுத் தூதரகப் பணியில், சாமானியர்களின் இந்த அளவு ஒத்துழைப்பையும், பங்கேற்பையும் இதுவரை நான் கண்டதில்லை என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

நாம் யார் என்பதை ஜி20 மாநாட்டின் மூலம் உலகிற்கு நிரூபித்துள்ளோம் என தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “திறமையான தலைமை, தைரியம் மற்றும் நமது நாட்டின் உற்சாகம் ஆகியவற்றைக் கொண்டு ஜி20 அமைப்பின் முழு கட்டமைப்பையும் இந்தியா தீர்மானித்தது. இப்படியாக, பெரிய மேற்கத்திய நாடுகளின் பிடியில் இருந்த முடிவுகளை நாம் எடுத்து அந்த பாரம்பரியத்தை மாற்றினோம். இம்முறை இந்தியா சொந்தமாக முடிவுகளை எடுத்தது. உலக அளவில் அஜெண்டாவை நாம் அமைத்தோம். உலகளாவிய தெற்கு மூலம் 120 க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைத்து நிகழ்ச்சி நிரலை அமைத்துள்ளோம். இது இந்தியாவின் கோட்டை. ஜி20 தலைவர் பதவி மூலம் இந்தியா புதிய அடியை எடுத்து வைத்துள்ளது. சரியான திசையில் அடியெடுத்து வைப்பதால் மக்கள் திருப்தி அடைகின்றனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியாது. இது புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. கல்வி, வளப் பயன்பாடு, சுகாதாரம், மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். காலநிலை மாற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கு தேவையான பொருளாதாரம் குறித்து விவாதித்துள்ளோம். சில நாடுகளில் உணவுப் பற்றாக்குறை, குறைந்து வரும் கல்வி முறை, மோசமான சுகாதார நிலைமைகள் மற்றும் அமைப்புகள் உள்ளன. உலக அளவில் தீர்வு காண இந்தியாவின் ஜி20 மாநாடு முக்கியமானது. அமெரிக்கா மீதான தீவிரவாத தாக்குதல், கோவிட், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மத்தியில், இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, மனச்சோர்வடைந்த நாடுகளுக்கு புதிய ஆற்றலை வழங்க உதவியுள்ளது.” என்றார்.

சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு: பிரதமர் மோடி!

ஒரு பக்கம் மேற்கு, மறுபுறம் ரஷ்யா. ஆனால் இடையில் பல நாடுகள் உள்ளன. இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் போர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் இதை மீண்டும் வலியுறுத்துவது ஏற்புடையதல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட வேண்டும் என ஜெய்சங்கர் கூறினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்பாக நாம் எடுத்த தீர்மானத்தை அனைத்து ஜி20 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

உலகளாவிய தெற்கில் ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். இந்த ஒற்றுமையின் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். குளோபல் சவுத் கூட்டணிக்கு 125 நாடுகளை அழைத்துள்ளோம். அனைத்து நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையின் ஒரு பகுதியாக இணைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios