Asianet News TamilAsianet News Tamil

அன்று 20 வயது.. இன்று 97! இவருக்கும், சோழ ஆட்சியின் செங்கோலுக்கும் இப்படியொரு சம்பந்தமா.!!

இன்று நீங்கள் அனைவரும் எனது இல்லத்தில் இருப்பது எனது அதிர்ஷ்டம் என்று நேற்று பிரதமர் மோடி ஆதீனங்கள் முன்னிலையில் கூறினார்.

Vummidi Sudhakar, maker of Sengol, recalls how he crafed the golden sceptre
Author
First Published May 28, 2023, 10:38 AM IST

டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

 பூஜையின் போது செங்கோல் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து ஆதினங்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி, செங்கோலை பெற்று கொண்டு அதனை மக்களவைக்குள் கொண்டு சென்றார். இதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்.

Vummidi Sudhakar, maker of Sengol, recalls how he crafed the golden sceptre

இதையடுத்து விழாவின் சிறப்பம்சமாக சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சர்வமத பிரார்த்தனையில் கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் உள்ளிட்ட 12 மத போதகர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனையின்போது சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அமர்ந்திருந்து அதனை வழிபட்டனர். இந்த சம்பவம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

செங்கோல் நமது பண்டைய நடைமுறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியத்தை மீண்டும் அதிகாரத்தின் சிறப்புப் பகுதியாக மாற்றுவதற்காக, தமிழகத்தின் பழமையான ஆதினம் மகான்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. செங்கோல் அதிகாரத்தின் சின்னம் மட்டுமல்ல, அரசருக்கு முன்பாக எப்போதும் இருப்பேன் என்றும், மக்களுக்காக அரசுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்றும் உறுதியளிக்கும் உறுதியான அடையாளமாகும்.

அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது. மறுபுறம், நாம் பண்டைய வரலாற்றைப் பார்த்தால், செங்கோலின் ஆதாரங்கள் சோழ ஆட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் மிக முக்கியமானவர் வும்மிடி எத்திராஜுலு. யார் அவர் என்பதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

Vummidi Sudhakar, maker of Sengol, recalls how he crafed the golden sceptre

வும்மிடி எத்திராஜுலுவுக்கும், அவரது சகோதரருக்கும் செங்கோல் தயாரிக்கும் போது அவருக்கு 20 வயது. தற்போது 97 வயதாகும் அவருக்கு புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதைக் காண வந்தார். செங்கோல் ஆதீனங்கள் மற்றும் வும்மிடி பங்காரு செட்டி குடும்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1947ல் வும்மிடி எத்திராஜுலுவும், அவரது சகோதரர் வும்மிடி சுதாகரும் இணைந்து ‘செங்கோல்’ தயாரித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோலில் புடைப்பு வேலை வெவ்வேறு பொற்கொல்லர்களால் செய்யப்பட்டது.

அது முடிவடைய 10-15 நாட்கள் ஆனது. இந்தக் குடும்பத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவரும், அவரது சகோதரர் ஜிதேந்திராவுடன் இணைந்து செயல்படும் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் ‘செங்கோல்’ சுமார் 70-75 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும். “செங்கோல் வேலை செய்ய குறைந்தது 30 நாட்கள் மற்றும் ஐந்து முதல் எட்டு பேர் வரை எடுத்திருக்கும். செங்கோலின் உச்சியில் ஒரு நந்தி (தெய்வீக காளை) போன்ற பல நுணுக்கமான விவரங்கள் மற்றும் செங்கோலில் தமிழில் எழுதப்பட்ட பல வரிகள் உள்ளன” என்று கூறினார்.

இதையும் படிங்க..தமிழன்டா.. தமிழுக்கு பெருமை சேர்த்த மோடி! ‘மகிழ்ச்சி’ ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன பிரதமர் மோடி

Follow Us:
Download App:
  • android
  • ios