2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார் உலகை உலுக்கியது. இதுவரை இந்தியா கண்டிராத மிகப்பெரிய ஊழலாக அது பேசப்பட்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார் உலகை உலுக்கியது. இதுவரை இந்தியா கண்டிராத மிகப்பெரிய ஊழலாக அது பேசப்பட்டது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலமான 2011-ல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அப்போதைய மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலப்படுத்தினார். இந்தியாவில் ஊழல் பெரிய விசயமில்லை என்றாலும் அந்த தொகை இதுவரை கண்டிராத ஒன்றாக இருந்தது. உலக தலைவர்கள் வரை, உள்ளூர்வாசிகள் வரை 1.76-க்கு அருகில் போடப்பட்ட பத்து பூஜ்ஜியங்களை பார்த்து வாயடைத்து நின்றனர்.

2ஜி வழக்கில் கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும், அப்போதைய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த திமுக-வின் ஆ.ராஜா, தூக்கியெறியப்பட்டார். ஊழல் முறைகேட்டுக்கு துணைபோனதாக கலைஞரின் மகள் கனிமொழி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆ.ராஜா, கனிமொழி இருவரும் 2ஜி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் தங்களை பழிவாங்கி விட்டதாக திமுக அலறிதுடித்தது. கிராமங்கள் வரை பேசுபொருளாக மாறிய 2ஜி வழக்கு திமுக-வை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி வீசியதோடு, அடுத்த பத்து ஆண்டுகளில் கோட்டையில் அமரவிடாமல் செய்தது.

2ஜி முறைகேடுகளை அம்பலப்படுத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் பெரிதாக பாராட்டப்பட்டார். உலகையே உலுக்கிய 2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. போதிய ஆதாராங்களை சமர்ப்பிக்காததால் தோல்வியை தழுவியது. இந்த வழக்கில் தீர்ப்பளித்தஓ.பி.சைனி, ஊழல்உண்மையில்நடக்கவில்லை, அப்படிநடந்ததாகபிம்பம்உருவாக்கப்பட்டது. மேலும்வழக்குதொடர்பாகக்கூறப்பட்டவைஅனைத்தும்புரளியும்புனைவுமாகஇருப்பதால், இதில்குற்றம்சாட்டப்பட்டஅனைவரும்விடுதலைசெய்யப்படுகிறார்கள் என்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இதையடுத்து வழக்கில் இருந்து ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்பு படுத்தி பேசப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. வழக்கு குறித்து 2014-ல் ‘டைம்ஸ்நவ்’தொலைக்காட்சிக்குஅர்னாப்கோஸ்வாமி, கணக்கு தணிக்கையாளர் வினோத் ராயிடம் பேட்டி கண்டார். அப்போது பேசிய வினோத் ராய், 2ஜிஊழல்தொடர்பாகநடைபெற்றவிசாரணையில்அப்போதையபிரதமர்மன்மோகன்சிங்பெயரைசேர்க்கக்கூடாதுஎன்றுதன்னைகாங்கிரஸ்எம்.பிசஞ்சய்நிருபம்நிர்பந்தித்ததாகவினோத்ராய்கூறியிருந்தார்.

இதையடுத்து வினோத் ராய் தம்மீது அவதூறு பரப்பியதாக சஞ்சய்நிருபம்டெல்லிநீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தார். பொய்யானஅறிக்கைஅளித்ததற்காகவினோத்ராய்மன்னிப்புகேட்கவேண்டும்என்றும்சஞ்சய்நிருபம்கோரியிருந்தார். இந்நிலையில்டெல்லிநீதிமன்றத்தில்பிரமாணபத்திரம்தாக்கல்செய்தவினோத்ராய், சஞ்சய்நிருபமுக்குமனஉளைச்சல்ஏற்படுத்தியதற்காகநிபந்தனையற்றமன்னிப்புக்கோரியுள்ளார். அர்னாப்கோஸ்வாமிஎடுத்தபேட்டியில்தான்கூறியதில்உண்மையில்லைஎன்றும்தான்அவ்வாறுபேசியதற்காகமன்னிப்புகோருவதாகவும்பிரமாணபத்திரத்தில் வினோத் ராய்குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலைதனதுட்விட்டர்பக்கத்தில்பதிவிட்டுள்ளசஞ்சய்நிருபம், 2ஜிமற்றும்நிலக்கரிஒதுக்கீடுகுறித்துகாங்கிரஸ்தலைமையிலானஐக்கியமுற்போக்குகூட்டணிஅரசுமீதுதவறானஅறிக்கைசமர்ப்பித்துஅவதூறுகிளப்பியகுற்றத்திற்காகநாட்டுமக்களிடம்வினோத் ராய் மன்னிப்புகேட்க வேண்டும்என்றுவலியுறுத்தியுள்ளார்.
