உத்தரகாண்ட் சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழப்பு!!
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். ஜோஷிமத் பகுதியில் உள்ள ஊர்கம்-பல்லா ஜகோலா நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் ஆண்கள். மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குரானா, காவல்துறை கண்காணிப்பாளர் பிரமானந்த்ரா தோவல், மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் நிர்வாகத்தினர் விபத்து நடந்த இடத்தை சென்றடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.