Asianet News TamilAsianet News Tamil

உ.பி.யில் வெள்ளம்: நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 11 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

Uttar Pradesh Flood Alert CM Yogi Adityanath Orders Relief Work In 11 Districts sgb
Author
First Published Sep 30, 2024, 10:11 AM IST | Last Updated Sep 30, 2024, 10:26 AM IST

கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

குஷிநகர், மகாராஜ்கஞ்ச், லக்கிம்பூர் கேரி, பல்யா, ஃபரூக்காபாத், கோண்டா, கான்பூர் நகர், ஜீ.பி. நகர், சீதாப்பூர், ஹர்தோய் மற்றும் ஷாஜகான்பூர் ஆகிய 11 மாவட்டங்களின் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் தொடர்புகொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மற்றும் மாகாண ஆயுதக் காவல் படையினர் (PAC) அடங்கிய குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயிர்கள் சேதமடைந்தது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கும், கால்நடைகளை இழந்தவர்களுக்கும் உடனடியாக நிதியுதவி வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

UPITS 2024: உ.பி. வர்த்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை அசத்தும் ஜல் சக்தி ஸ்டால்!

குஷிநகரில் 10 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

முதலமைச்சர் யோகியின் உத்தரவின் பேரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிவாரண ஆணையர் பானு சந்திரா கோஸ்வாமி தெரிவித்தார். குஷிநகரில் கண்டக் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 16 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 42 படகுகள் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாகாண ஆயுதக் காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சிவபுர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 10 பேரை மீட்டனர். இதேபோல், மகாராஜ்கஞ்சில் பாதிக்கப்பட்ட 45 பேர் வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு படகு மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை இங்கு 2,095 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. லக்கிம்பூர் கேரியில் 11 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 7 கிராமங்கள் கரை உடைப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளன. இதனால் இங்கு 14 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இங்கு 550 பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

1,200 பேருக்கு மதிய உணவு

பல்யாவில் 3 வட்டங்களில் 18 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 5 கிராமங்கள் கரை உடைப்பு அபாயத்தில் உள்ளன. 9 கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 700 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஃபரூக்காபாத்தில் 350 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில் காக்ரா நதியில் வெள்ளம் ஏற்பட்டு 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, கான்பூர் நகர், ஜீ.பி. நகர், சீதாப்பூர், ஹர்தோய் மற்றும் ஷாஜகான்பூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

30 வருடத்துக்குப் பின் உங்கள் சேமிப்புக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்? கணக்கிடுவது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios