புதிய ஆயுஷ் கல்லூரிகளை திறப்பதற்கான நிதியை ரூ.9 கோடியில் இருந்து ரூ.70 கோடியாக உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆயுஷ் கல்லூரிகளுக்கான நிதியை ரூ.9 கோடியில் இருந்து ரூ.70 கோடியாக உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

வடகிழக்கு மாநிலத்தில் புதிய ஆயுஷ் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றார். ஆயுஷ் துறையில் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அதிகரித்து வருவதாக அமைச்சர் சோனாவால் கூறினார்.
ஆயுஷ் அமைச்சகம் கவுகாத்தியில் ஏற்பாடு செய்த 'ஆயுஷ் அமைப்பு கல்வி, தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கில் பேசிய அவர் இதை தெரிவித்தார்.
பஞ்சகர்மா டெக்னீசியன் படிப்பு சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படும் என்றார்.
