Asianet News TamilAsianet News Tamil

தியேட்டரில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இருவர் கைது...

two arrested in theatre
two arrested-in-theatre
Author
First Published Mar 12, 2017, 12:07 PM IST


கடந்த  நவம்பர்  மாதம் 3௦ ஆம் தேதியன்று, அனைத்து  திரை அரங்குகளிலும் தேசிய கீதம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் , படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுகிறது .

இந்நிலையில், ஹைதரபாத்திலுள்ள கச்சிகுடா பகுதியில் உள்ள  ஐநாக்ஸ் தியேட்டரில் தேசிய கீதம் இயற்றப்பட்டது.அப்போது  இருவர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்துள்ளனர். இதனை  பார்த்த  ஒரு நபர், நாட்டு பற்றின் காரணமாக அருகில் உள்ள  காவல் நிலையத்தில்  புகார் தெரிவித்துள்ளார் .

இதனடிப்படையில், இவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த செய்தி  மக்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Follow Us:
Download App:
  • android
  • ios