தியேட்டரில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இருவர் கைது...
கடந்த நவம்பர் மாதம் 3௦ ஆம் தேதியன்று, அனைத்து திரை அரங்குகளிலும் தேசிய கீதம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் , படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுகிறது .
இந்நிலையில், ஹைதரபாத்திலுள்ள கச்சிகுடா பகுதியில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் தேசிய கீதம் இயற்றப்பட்டது.அப்போது இருவர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்துள்ளனர். இதனை பார்த்த ஒரு நபர், நாட்டு பற்றின் காரணமாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் .
இதனடிப்படையில், இவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .