Asianet News TamilAsianet News Tamil

ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா படைத்தளபதி என்கவுன்டர்.. பிரதமர் மோடி வருகைக்கு முன்பு அதிர்ச்சி சம்பவம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பாரிஸ்வானி பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. 

Trooper Dead 4 Injured In Major Encounter In Jammu Ahead Of PM Narendra Modi before Visit
Author
Jammu, First Published Apr 22, 2022, 8:48 AM IST

இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் பேசிய போது, ‘பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. அங்கு மேலும் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும். 

Trooper Dead 4 Injured In Major Encounter In Jammu Ahead Of PM Narendra Modi before Visit

இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒருவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதி யூசுப் கான்ட் ஆகும். சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்பட சட்டவிரோத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறினார்.

Trooper Dead 4 Injured In Major Encounter In Jammu Ahead Of PM Narendra Modi before Visit

இதையடுத்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று பிரதமர் மோடி ஜம்முவில் உள்ள பள்ளி கிராமத்திற்கு செல்கிறார். பிரதமர் வரக்கூடிய சூழ்நிலையில், நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மேலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : TN Corona : தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. உஷார் மக்களே ! முகக்கவசம் அவசியம்.!!

Follow Us:
Download App:
  • android
  • ios