இந்தியாவில் 1000ஐ கடந்த கொரோனா பலி.. மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு! மாநில வாரியாக முழு விவரம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. பலி எண்ணிக்கை 1000ஐ கடந்துவிட்ட நிலையில், மாநில வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தேசியளவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவில் 31787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 1000ஐ கடந்துவிட்டது. இதுவரை 1008 பேர் இந்தியாவில் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 7797 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய அளவில் மகாராஷ்டிரா தான் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 3774 பேரும் 3314 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
மகாராஷ்டிரா - 9318
டெல்லி - 3314
குஜராத் - 3774
மத்திய பிரதேசம் - 2387
ராஜஸ்தான் - 2393
உத்தர பிரதேசம் - 2053
தமிழ்நாடு - 2162
ஆந்திரா - 1332
தெலுங்கானா - 1004
மேற்கு வங்கம் - 725
கர்நாடகா - 532
கேரளா - 485
ஜம்மு காஷ்மீர் - 565
பஞ்சாப் - 352
ஹரியானா - 310
அந்தமான் நிகோபார் - 33
அருணாச்சல பிரதேசம் - 1
அசாம் - 38
பீகார் - 378
சண்டிகர் - 56
சத்தீஸ்கர் - 38
ஹிமாச்சல பிரதேசம் - 41
ஜார்கண்ட் - 106
மேகாலயா - 12
உத்தரகண்ட் - 54
ஒடிசா - 122
லடாக் - 22.