Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை அழிக்க நரபலி கேட்ட அம்மன்! கோவிலில் தலையை வெட்டி பூசாரி அரங்கேற்றிய கொடூர சம்பவம்!

கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால், நரபலி கொடுக்க வேண்டும், என தான் வணங்கும் பிராமணி தேவி அம்மன் கனவில் வந்து கூறியதால், ஒருவர் தலையை வெட்டி கொன்றதாக கோவில் பூசாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

shocking The priest who chopped the head of the temple
Author
Chennai, First Published May 29, 2020, 12:51 PM IST

கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால், நரபலி கொடுக்க வேண்டும், என தான் வணங்கும் பிராமணி தேவி அம்மன் கனவில் வந்து கூறியதால், ஒருவர் தலையை வெட்டி கொன்றதாக கோவில் பூசாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம்,  கட்டாக்கி என்கிற இடத்தில் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா. 72 வயதாகும் இவர், தினமும் அந்த கோவிலின் அணைத்து பணிகளையும் செய்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 52 வயது மதிக்க தக்க ஒருவர் தலையை கோவில் சன்னதிக்குள் வெட்டி விட்டு... போலீசாரிடம் சரணடைந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, தான் தினமும் வணங்கி வரும், 'பிராமணி தேவி அம்மன்' தன்னுடைய கனவில் தோன்றி, தற்போது இந்திய மக்களை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் அழிய வேண்டும் என்றால் தனக்கு நர பலி வேண்டும் என கேட்டதால் தான் இப்படி செய்ததாக கூறினார்.

shocking The priest who chopped the head of the temple

மேலும் இவர் நரபலி கொடுத்ததாக கூறப்பட்ட அந்த நபரின், உடலையும் கை பற்றிய போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து அந்த கோவிலின் பூசாரி சன்சாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தின் முதல் கட்ட விசாரணையின் தகவல் பற்றி டி.ஐ.ஜி மத்திய ரேஞ்ச் ஆஷிஷ்குமார் சிங் கூறுகையில்....  நரபலி கொடுத்ததாக கூறும் சன்சாரி, மற்றும் பலி கொடுக்கப்பட்ட நபர் இருவரும். கோவிலுக்குள் அதீத குடி போதையில் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்றும், குடி போதை தெளிந்தவுடன் பூசாரி போலீசில் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios