சபரிமலையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தின்போது பயங்கர பதற்றம் நிலவினாலும் இதையெல்லாம் சமாளித்து எந்தவித அசாம்பாவிதமும் நடக்காமல் மிகத் திறமையாக கையாண்ட ஐஜி ஸ்ரீஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்  சபரிமலையில் நடைபெற்ற படி பூஜையின் பங்கேற்ற  ஐஜி ஸ்ரீஜித் அன்யூனிபாஃர்மில் நெஞ்சம் உருக வேண்டிக் கொண்டது அனைவரையும் நெகிழச் செய்தது.

சபரிமலையில் கடந்த வாரம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என பக்தர்கள் நடத்திய போராட்டத்தின் போது திரும்பிய பக்கமெல்லாம் நம் அனைவரின் கண்களில் பட்டவர் ஐஜி ஸ்ரீஜித்தான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போராட்டம் நடத்தும் பக்தர்களை சமாதானப்படுத்துவது, கோவிலுக்குள் நுழைய முயலும் இளம் பெண்களை சமாளிப்பது, பத்திரிக்கையாளர்களிடம், நிதானமாக பேசி தகவல் சொல்லுவது, உயர் அதிகாரிகளின் கட்டளைகளை செயல்படுத்துவது என சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஐஜி ஸ்ரீஜித்தான். மொட்டைத் தலையுடன் ஓடி ஓடி பணியாற்றிய அவர் நேற்று நடந்த படி பூஜையில் பங்கேற்றறு நெஞ்சம் உருக பிரார்த்தனை செய்தார்.

கேரளாவில்புகழ்பெற்றசபரிமலைஐயப்பன்கோவிலில்அனைத்துவயதுபெண்களும்சாமிதரிசனம்செய்யஅனுமதிஅளித்துஉச்சநீதிமன்றம்அண்மையில் தீர்ப்புஅளித்தது. இதற்குஎதிராகமாநிலம்முழுவதும்போராட்டங்கள்தீவிரமடைந்துஇருக்கும்நிலையில், ஐப்பசிமாதபூஜைக்காககடந்த 17-ந்தேதிசபரிமலைகோவிலின்நடைதிறக்கப்பட்டது.

அது முதல்ஐயப்பனைதரிசிப்பதற்காகவந்தபெண்கள், பக்தர்களால்ஆங்காங்கேதடுத்துநிறுத்தப்பட்டனர். இதனால்அந்தபகுதிகளில்போலீசாருக்கும், பக்தர்களுக்கும்இடையேமோதல்ஏற்பட்டது. எனவேசபரிமலைசன்னிதானம், பம்பை, நிலக்கல்உள்ளிட்டஇடங்களில் 144 தடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரச்சனைகளை சமாளிப்பதற்காக ஸ்ரீஜித் என்ற ஐஜி சபரிமலைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். சென்சிட்டிவான அந்த நேரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அமைதியை நிலை நாட்டினார். பத்திரிக்கையாளர் கவிதா, பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோர் சபரிமலை வந்த அன்று, அவர்களை , ஐஜி ஸ்ரீஜித் 18ம் படி லிருந்து 500 மீட்டர் தூரம் வரை அழைத்துச் சென்றார். ஆனால் பக்தர்கள் எதிர்ப்பு வலுக்கவே இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி பெண்களை திருப்பி அனுப்பி வைத்தார்.

அப்போது அவர் செயல்பட்டவிதம் அனைவரையும் கவர்ந்து. இந்நிலையில் இன்று சபரிமலை நடை சாத்தப்படுகிறது. இதையொட்டி நடந்த படி பூஜையில் ஸ்ரீஜித் ஐஜி கலந்து கொண்டு கண்ணீர் மல்க ஐயப்பனை வேண்டிக் கொள்ளும் படம் வைரலாகி வருகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு புறம், பக்தர்கள் எதிர்ப்பு மறுபுறம் என இரு தலைக் கொள்ளி எறும்பு போல் தவித்த அவரின் கடமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.