குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் க்ருஹ லக்ஷ்மி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16-ஆம் தேதி முதல் பெறப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக அரசு அறிவித்துள்ள க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிக்கு ரூ.2,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்கள், இப்போது ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அணுகலாம். இந்த திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் க்ருஹ லக்ஷ்மி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16-ஆம் தேதி முதல் பெறப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு.. எப்படி தற்காத்து கொள்வது?
எப்படி விண்ணப்பிப்பது?
சக்தி பவனில் சேவா சிந்து போர்ட்டலை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார், பயனாளிகள் விண்ணப்பங்களை இப்போதே சமர்ப்பிக்கலாம். க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் பயனாளிகள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சேவா சிந்து போர்ட்டல், பெங்களூரு ஒன், கர்நாடகா ஒன் மற்றும் கிராம ஒன் மையங்களில் அவர்கள் விண்ணப்பங்களை இலவசமாக சமர்ப்பிக்கலாம். வரி செலுத்துவோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
விண்ணப்பதாரர்கள் அவரது மற்றும் கணவரின் ஆதார் அட்டையை வழங்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்களுக்கு, 1902 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி?
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி எதுவும் இல்லை. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான செயல்முறை ஆண்டு முழுவதும் இருக்கும்.
விண்ணப்பிக்க நேரடி இணைப்பு
க்ருஹ லக்ஷ்மி திட்டம் 2023க்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், க்ருஹ லக்ஷ்மி திட்டம் 2023க்கான கர்நாடக அரசின் நேரடி இணையதளத்தைப் பார்வையிடவும் https://sevasindhu.karnataka.gov.in/Sevasindhu/English.
