Asianet News TamilAsianet News Tamil

எப்படி டெபாசிட் செய்யலாம்...? ரிசர்வ் வங்கி அறிக்கை என்னதான் சொல்கிறது....?

reserve bank-report
Author
First Published Dec 20, 2016, 9:20 AM IST


வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதில் புதிய கிடுக்கிப்பிடிகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. 

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மக்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்க பல கெடுபிடிகளை விதித்து வருகின்றன.

reserve bank-report

இந்நிலையில், கருப்பு பணத்தை வங்கியில் அதிகமாக டெபாசிட் செய்வதை தடுக்கும் வகையில் தனது நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அதன்படி ரிசர்வ் வங்கி  புதிய உத்தரவுகளை நேற்று பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

 அதன்படி, தனிநபர் ஒருவர், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இம்மாதம் 30-ந்தேதிக்குள் பல முறை டெபாசிட் செய்ய முடியாது, ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். உதாரணமாக ஒருவர் செல்லாத ரூபாய் நோட்டுகளாக ரூ. 5100 டெபாசிட் செய்துவிட்டால், அதன்பின் ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக 2-வது முறை டெபாசிட் செய்ய முடியாது. 

reserve bank-report

 செல்லாத ரூபாய்களாக ரூ. 5 ஆயிரம்வரை வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட்செய்யத் தடையில்லை. உதாரணமாக ரூ. 3 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என எத்தனை முறைவேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.  ஆனால், வருமான வரித்துறையினர் குறிப்பிட்ட கணக்கு உடையவரை விசாரனைக்குள் கொண்டு வந்தால், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்

Follow Us:
Download App:
  • android
  • ios