ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசும் போது, 'பாரத் மாதா கி ஜே' என்பதற்கு பதிலாக 'அதானி ஜி கி ஜே' என்று பிரதமர் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் அதற்காக பணியாற்றுகிறார்" என்று கிண்டல் செய்தார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியின் மத்தியில், “பாரத் மாதா ஹை கான்?” என்ற ராகுல் காந்தி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பேரணியில் உள்ள அறிக்கையின் நோக்கம் தெளிவாக இல்லை என்றாலும், நெட்டிசன்கள் மீம்ஸ், நகைச்சுவையான ஒன்-லைனர்கள் வைத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜஸ்தான் மாநிலம், பூண்டியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசும் போது, 'பாரத் மாதா கி ஜே' என்பதற்கு பதிலாக 'அதானி ஜி கி ஜே' என்று பிரதமர் சொல்ல வேண்டும், ஏனென்றால் அவர் அவருக்காக பணியாற்றுகிறார்" என்று கிண்டல் செய்தார் ராகுல் காந்தி.

Scroll to load tweet…

பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் கீழ் தேவையற்ற நன்மைகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து அதானி குழுவை குறிவைத்து வருகிறார். ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கான கட்சியின் கோரிக்கை, அமெரிக்க ஆராய்ச்சிக் குழுவான ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகளால் தூண்டப்பட்டது.

அரசாங்கத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகள் மீதான ஆய்வை தீவிரப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி பேசும் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா