இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,

நாட்டில் ஏழை மக்கள் அழுது கொண்டிருக்கும் போது மோடி சிரித்தார். முதலில் அங்கே சிரித்தார். இப்போது இங்கு அழுகிறார். இதன் மூலம் மோடியின் முகத்திரை கிழிந்து உண்மை வெளிப்பட்டது என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று ஜப்பானில் பேசிய மோடி, கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றி பேசும் போது சிரித்தார்.

ஆனால் இன்று கோவாவில் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, தனக்கு பதவியை விட நாட்டு மக்கள் தான் முக்கியம். நாட்டிற்காக தான் குடும்பம் மற்றும் வீட்டை துறந்து வந்ததாக கூறி கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.