Asianet News TamilAsianet News Tamil

விஸ்வரூபம் எடுக்கும் மல்லையா விவகாரம்! பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் ராகுல்!

ரபேல் விவகாரம் போல் மல்லையா விஷயத்திலும் மத்திய அரசு பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Rahul accuses... Jaitley of colluding criminal Vijay Mallya
Author
Delhi, First Published Sep 14, 2018, 9:05 AM IST

ரபேல் விவகாரம் போல் மல்லையா விஷயத்திலும் மத்திய அரசு பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது. நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லியை, விஜய் மல்லையா சந்தித்துள்ளார். தனது சந்திப்புகள் பற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிடும் அருண்ஜேட்லி, இந்த சம்பவம் குறித்து ஏன் குறிப்பிடவில்லை. Rahul accuses... Jaitley of colluding criminal Vijay Mallya

ஒருசில வார்த்தைகள் மட்டுமே மல்லையா தம்மிடம் பேசியதாக அருண்ஜேட்லி கூறியது. தலைமறைவான மல்லையா, மத்திய நிதியமைச்சரை சந்தித்தபோது, லண்டனுக்கு செல்வதாக கூறியுள்ளார். அதை சிபிஐ, அமலாக்கத்துறை அல்லது காவல்துறைக்கு ஏன் அருண்ஜேட்லி தெரிவிக்கவில்லை. எனவே ஒரு குற்றவாளி நாட்டைவிட்டு ஓடுவதற்கு அருண்ஜேட்லி உடந்தையாக இருந்துள்ளார். Rahul accuses... Jaitley of colluding criminal Vijay Mallya

மேலும் மல்லையா விவகாரத்தில் கைது நோட்டீஸ், தகவல் தெரிவிக்கும் நோட்டீசாக மாற்றப்பட்டது. சிபிஐ அமைப்பைக் கட்டுப்படுத்தும் ஒருவர்தான் இதைச் செய்திருக்க முடியும். ரபேல் விவகாரத்தில் பொய் சொல்லும் மத்திய அரசு, விஜய் மல்லையா விவகாரத்திலும் பொய் கூறுகிறது என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios