சீனாவின் புஸ்ஹாவோ நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

சீனாவின் புல்ஹாவோ நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்து வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தரவரிசையில் 9-ம் இடத்தில் உள்ள சீனாவின் சன் யுவை எதிர்கொண்டார் தரவரிசையில் 11-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து. 

இந்நிலையில், சூப்பர் சீரிஸ் போட்டியில் பங்கேற்று சிந்து வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.