மோடி அரசு லாலிபாப்புகளைத்தான் மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக விமர்சித்து பேசினார். 

நாடாளுமன்ற தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துவருகிறது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கட்ட பிரியங்கா அந்த மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரிலிருந்து 100 கி. மீ. தொலைவுக்கு பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி சென்றார். செல்லும் வழியில் மிர்சாப்பூரில் திரண்டிருந்த மக்களிடம் பிரியங்கா பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


”நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி எதையுமே செய்யவில்லை. இந்த அரசு லாலிபாப்புகளைத்தான் மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல் என்பது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியிலே வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தை கொண்டு வந்தோம்” என்று பேசினார்.