நடு ரோட்டில் பணத்தை வாரி வாரி வழங்கிய .....அரசியல்வாதிகள் .......!!!

500 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் அதிரடி அறிவிப்பால், ஆடி போன பல முதலைகளில், சில முதலைகள் தாமாகவே முன்வந்து, பணத்தை கட்டு கட்டாக கட்டி, பொதுமக்களுக்கு வெட்ட வெளிச்சத்தில் கொடுத்துள்ளனர்.
கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தில், எமஎல்ஏ ஒருவரும் அவருடன் மற்றும் சில அரசியல் தலைவர்களும் சேர்ந்து தலைக்கு மூன்று லட்சம் விகிதம்
தங்களது சொந்த பணமான கோடிக்கணக்கன ரூபாயை லோனாக வழங்குவதாக
தெரிவித்து வழங்கினர்.......!

அடேய் ...பேங்குள கூட கிடைக்காத லோன், இப்ப அரசியல் வாதி மூலம் எப்படி பப்ளிக்ல கிடைக்குது பாருங்களேன்.......
இதற்கு பின்னணி, முன்னணி .எல்லாம் நமக்கே தெரியும் தானே.......
அதாவது மக்கள் நலன் காரணம் இல்லை !

உள் நோக்கம் என்ன ?
அதாவது, செல்லாத பணத்தை இப்படி மக்களுக்கு லோன் என்ற பெயரில் பிரித்து
கொடுத்துவிட்டால்,பாவபட்ட அப்பாவி மக்கள் தவணை முறையில்
வங்கிகளில் திருப்பி செலுத்திவிடுவார்கள் என திட்டமாம் .......
மோடி திட்டம் விட ........இவங்க போடுற திட்டம் படும் பேஜாரா இருக்கு பா......!!!
