political leaders about nitish kumar

நிதிஷ் குமார் சுயநலவாதி- ராகுல் தாக்கு

காங்கிஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிஸ், ஐக்கிய ஜனதா தளம் அமைத்த மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக என்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளார். சமூகவிரோத சக்திகளுடன் தனது சொந்த அரசியலுக்காக நிதிஷ் குமார் கைகோர்த்துள்ளார். யாரை எதிர்த்தாரோ அவர்களுடனே நிதிஷ் சேர்ந்துவிட்டார். இதுதான் இந்திய அரசியலில் உள்ள பிரச்சினை. 

மக்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை அரசியலில் தெரிந்து கொள்ளலாம். நிதிஷ் குமாரின் திட்டத்தை நான் அறிந்து கொண்டேன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பே பா.ஜனதாவுடன் சேர அவர் திட்டமிட்டு இருந்தார். சிலர் தங்களின் சுயலாபத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். கொள்கை, நம்பிக்கை, எதுவும் அவர்களுக்கு கிடையாது. அதிகாரப் பசிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்’’ எனத் தெரிவித்தார். 

இமாச்சலப்பிரதேச மாநில முதல்வர் வீரபத்ர சிங் கூறுகையில், “இந்த விசயத்தில்நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை. எனினும், நிதிஷ் குமார் அடிக்கடி தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்வது அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தராது’’ என்றார்.