Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ இப்படியா செய்வது? - பெற்ற மகளை “சூடான தோசை சட்டியில்”  உட்கார வைத்து கொடுமை செய்த தாய்..!

Police arrested a mother who was harassing her and setting her 4-year-old daughter in a hot dosa suit
Police arrested a mother who was harassing her and setting her 4-year-old daughter in a hot dosa suit
Author
First Published Dec 4, 2017, 5:14 PM IST


கள்ளக்காதலன் எதிர்ப்பு தெரிவித்ததால், 4-வது வயதான பெற்ற மகளை “சூடான தோசை சட்டியில்” உட்காரவைத்தும், நிற்கவைத்தும் கொடுமைப்படுத்திய தாயை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம், காகுளம் மாவட்டம், இச்சாபுர்தைச் சேர்ந்தவர்கள் லலிதா மகாபத்திரா(வயது25), இவரின் கள்ளக்காதலன் பிரகாஷ்(வயது 28). லலிதாவின் முதல் கணவர் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால், தனது 4வயது மகளுடன் கள்ளக்காதலன் பிரகாஷுடன் லலிதா வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் எஸ்.ஆர். நகரில் உள்ள ஒருவிடுதியில் தங்கி இருக்கின்றனர். அங்கு பிரகாஷ் காவலாளியாகவும், லலிதா சமையல் செய்யும் பணியிலும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று எஸ்.ஆர். நகரில் உள்ள அனாதை ஆசிரமத்துக்கு சென்ற லலிதா, பிரகாஷ் இருவரும், தாங்கள் செகந்திராபாத் ரெயில்வே நிலையத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்தோம். ஆனால், அந்த குழந்தை தற்போது எங்களுடன் வசிக்க விரும்பிவல்லை, அதனால், இங்கு கொண்டுவந்துவிட அனுமதிக்க முடியுமா எனக் கேட்டனர்.

ஆனால், அதற்கு அனாதை ஆசிரமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் லலிதா, பிரகாஷிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியின் உண்மையான தாய், லலிதா என்பதும், கள்ளக்காதலுடன் வாழ இடையூறாக பெற்ற மகள் இருப்பதால், அவளை அனாதை ஆசிரமத்தில் விட வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியை பல்வேறு கொடுமைகள் செய்து இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து எஸ்.ஆர். நகர்போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது நவீதுதீன் கூறுகையில், “ முதலில் அனாதை ஆசிரமத்தில் கொண்டு வந்து தனது 4-வது மகளை லலிதா விட முயற்சித்துள்ளார். அவர்கள் கேட்டபோது, செகந்திராபாத் ரெயில்நிலையத்தில் இந்த சிறுமியை பார்த்ததாகத் தெரிவித்தார். அதன்பின் நாங்கள் வந்து விசாரணை நடத்தியதில், அது தன்னுடைய மகள் என லலிதா ஒப்புக்கொண்டார். தான் தங்கியிருக்கும் விடுதியில் ஒருவரின் லேப்டாப்பை தனது மகள் உடைத்துவிட்டார் என்பதற்காக மகள் என்றும் பாராாமல் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

சூடான தோசை சட்டியில் தனது 4வயது மகளை உட்கார வைத்தும், நிற்கவைத்தும் அந்த குழந்தையை லலிதா கொடுமைப்படுத்தி இருக்கிறார். அந்த குழந்தையின் பின்புறத்தையும், காலையும் பார்த்தபோது, அனைத்தும் தீக்காயங்களாக இருந்தன.

அனாதை ஆசிரமத்தில் ஏன் குழந்தையை விட வந்தீர்கள் என்று லலிதாவிடம் கேட்டபோது, தனது கள்ளக்காதலன் பிரகாஷுடன் வாழ்வதற்கு இடையூறாக மகள் இருந்தார். பிரகாஷூம், குழந்தையை வெறுக்கிறார், இதனால், இருவருக்கும் இடையே சண்டை உருவாவதால் குழந்தையை ஆசிரமத்தில் சேர்க்க முடிவு செய்தோம். தான் இன்னும் தனது கணவரிடம் இருந்து முறையாக விவாகரத்து கூட பெறவில்லை என்று விசாரணையில் தெரிவித்தார்” என்றார்.

இதையடுத்து, தனியார் குழந்தைகள் காப்பகத்தில் போலீசார், லலிதாவின் 4வயது மகளை ஒப்படைத்தனர். அந்த காப்பகத்தின் தலைவர் அச்சுதா ராவ் கூறுகையில், “ சூடான தோசைட்டியில் குழந்தையை உட்கார வைத்ததால், குழந்தையின் பாதம், பின்புறம் எல்லாம் தீ காயத்தால், வெந்துள்ளன. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்நிலையில், குழந்தையை கொடுமைப்படுத்திய லலிதா, பிரகாஷ் மீது ஐ.பி.சி. 324, 75, 82 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios